Wednesday 17 December, 2008

முயற்சி ...



வெற்றியின் தேடலில்

ஒவ்வொரு முறை

தோற்கும்போதும்

எங்காவது ஓடிச்சென்று

அழுது திர்த்துவிடுவதென்று

தனி இடம் அமர்கின்ற

மனது

அடுத்த தோல்விக்கு தயாராகிவிடுகிறது .





ஒவ்வொரு சந்திப்பின்
முடிவிலும்
சண்டையோடுதான் பிரிவேன்
நாளைய சந்திப்பை
உன் முத்தத்தோடு
தொடங்குவதற்காக ....

11 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஒவ்வொரு சந்திப்பின்
முடிவிலும்
சண்டையோடுதான் பிரிவேன்
நாளைய சந்திப்பை
உன் முத்தத்தோடு
தொடங்குவதற்காக ....\\

மிக அழகான ஊடல் ...

முத்தம் பெறும் விதமும் அருமை.

தேவன் மாயம் said...

அழகிய
வார்த்தை
அமைப்புடன்

நல்லகவிதை
தேவா...

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

Sinthu said...

தோல்வி மேல தோல்வி வந்தா என்ன செய்வது என்ன.......

தேவன் மாயம் said...

மனது
அடுத்த தோல்விக்கு தயாராகிவிடுகிறது .
------------------------------------தோல்வி நினைத்துக்கலங்க வேண்டாம்....

குமரை நிலாவன் said...

ரெம்ப நன்றி ஜமால் அண்ணா,தேவா,சிந்து.

தேவன் மாயம் said...

வருக
என் வலைக்கு
கருத்துரை
தருக..

தேவா..

Anonymous said...

\\ஒவ்வொரு சந்திப்பின்
முடிவிலும்
சண்டையோடுதான் பிரிவேன்
நாளைய சந்திப்பை
உன் முத்தத்தோடு
தொடங்குவதற்காக ....\\
ஜூப்பர்

குமரை நிலாவன் said...

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி. கவின்

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பதிவு அன்பரே.. தங்களுக்கு நேரம் இருப்பின் என்னுடைய வலைப்பூவிற்கு வருகை தருக..

SASee said...

ஒருவேளை தோல்விகள்தான் எங்கள் வெற்றிகளோ....?

முத்தங்களுக்கு இப்படியும் வழிகளா?

அருமை