Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, 7 March 2010

தண்டனை




அவளை

மரணம் கூட

தழுவியிருக்கலாம்

என்னால்

மறக்கப்படுவதை விட


வரம்


கடந்து வந்த

காலங்களை

திரும்பிப் பார்க்கிறேன்

இழந்தவைகளை

எண்ணிப் பார்க்க

வயதை முந்திச்செல்கிறது

எண்ணிக்கை

சாதனை ஒன்றும்

இல்லை

சாதாரண மனிதனாக

வாழவும் இல்லை

இறைவா

இனி ஒருமுறை இந்த

மனிதப்பிறவி வேண்டா



குறிப்பு : இரண்டாவது கவிதை எனது நண்பர் பாலு எழுதியது

Thursday, 27 August 2009

காதல்





தொடர்ச்சியற்ற பயணம்
என்று தெரிந்தும்
தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது பயணங்கள்
அவளது நினைவுகளோடு




அவள் என்றோ
தொலைத்து விட்ட
என் நினைவுகளை
எதிர்பாராத சந்திப்பில்
எனது விழிகளில்
தேடிக்கொண்டிருக்கிறாள்




நீ
என்னை மறந்துவிடு
வலிகளோடு வார்த்தைகளையும்
வீசிச்சென்றுவிட்டாள்

Saturday, 4 July 2009

அகோர உருவம்



நிசப்த இரவொன்றில்
அனுமதியுடனே மின்சாரம்
விடை பெற்றுக்கொண்டதில்
மெழுகுவர்த்தியின் சுடரையே
சுற்றியது பெயர் தெரியாத
பூச்சியொன்று
நீண்ட இரு கைகளில்
ஒன்று இறகு பற்றி
ஒவ்வொரு பாகமாக சுடரின்
தீயில் வாட்டிய பின்
அறை அதிரும் வண்ணம்
சிரித்து விட்டு அடங்கியது
அந்த உருவம் என்னுள்

Monday, 8 June 2009

நானே கவிதைன்னு சொல்லிக்கிறது - 2


என் காதல்



ஏழாவது படிக்கும்போது

இடைவிடாது பேசிய உன்னை

பார்த்த நான் பைத்தியம் என்றேன்

இன்று

உன்மீதான என் காதலை

என் மௌனங்களால் சிதைத்துக்கொண்டிருக்கிறேன்


ஒவ்வொரு கோடை விடுமுறையிலும்

நீ வரும்போது

வைரமுத்து கவிதை வரிகள் போல்

என் பிம்பம் விழுந்து கண்ணாடி

உடைந்ததோ இல்லையோ

உன் பிம்பம் விழுந்து

என் இதயம் உடைந்தது


எனக்காக நான் வாங்கிய

எந்தப் பொருளும்

என்னிடம் அதிக நாள் இருந்ததில்லை

தானமாக கொடுத்துவிடுவது

பிறர் தனதாக்கிகொள்வது

உனக்காக நான் வாங்கிய

ஒரு பொருள்

ஆறு வருடங்களாக என்னிடமே....


Sunday, 17 May 2009

நானே கவிதைன்னு சொல்லிக்கிறது 1

தொலைந்த ஒன்றை
தேடும் முயற்சியில் நான்
அம்மாவின் அன்பில்
அப்பாவின் அறிவுரையில்
பக்கத்து வீட்டு மழலை மொழியில்
நிலைக்கண்ணாடியில்
கணினியில்
புத்தகங்களில்
கவிதையில் தொலைதலும் பின்
மீட்தலும் நித்தம் நிகழும் நிகழ்வு .
பின் எங்கு தேடியும் கிடைக்க வில்லை
காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....

Thursday, 9 April 2009

காத்திருக்கிறேன் ...



பொருளாதாரத்தை தேடிச் சென்ற
நீ
எங்கே என்னை தொலைத்து விடுவாயோ
என்ற பயத்தோடு காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்துவிடு
தனிமை என்னை தனிமைப்
படுத்தும் முன்
என் எதிர்பார்ப்புகளும்
வற்றிவிடும் முன்
அதைவிட
எந்தவொரு காரணமும் கூறி
தவிர்க்க முடியாமல்
உன்னையொத்த ஒருவன்
என்னை பெண் பார்க்க வரும்முன்
வந்துவிடு சீக்கிரம்

Saturday, 7 March 2009

கனவு
இது இல்லையென்றால்
மனிதனின்
வாழ்க்கையில் முழுமையும்
இல்லை
-----------------------------------------------------------------
வன்முறை
கல்லறை ஆகும் வரை
தேசத்தில்
அமைதியின் கருவரை
உருவாவதில்லை
-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது

உயிர் போகிற வலியை விடக்கொடுமையானது
மனசுக்குப் பிடித்தவர்களின் கண்ணிர்த்துளிகள்
அதைவிடக் கொடுமையானது அதற்கு காரணம்
நாமாக இருப்பது

Friday, 13 February 2009

நானாக நீ....


ஒரு
தொலைதூர பயணத்திற்காக ரயில்
நிலையத்தில் காத்திருந்த தருணத்தில்
என்னை நோக்கி குழந்தையுடன் வந்த அவள் ...
நான்கு வருடங்களுக்கு முன்
என்னுள் பலமுறை தன் உதடு பதித்தவள்
ஏமாற்றங்களையே அதிகமாக சந்தித்த இதயம்
என்று தெரிந்ததாலோ என்னவோ
என் காதலை சொன்னவுடன் ஏற்றுக்கொண்டவள்
அன்றும் சரி இன்றும் சரி
என் தனிமை இரவுகளின் அமைதியில்
அருகில் இருப்பதும் அவள் நினைவுகள் மட்டுமே
ஆம் அவள் என் அவளே தான் ...
அருகில் வந்த அவள் வழக்கமான
நலம் விசாரிப்புகளுக்குப் பின்
" நான்
இன்றும் உன்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்ற நம்பிக்கையில் தான்
அவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்னையும் உன்னைப்போல் இந்த சமுதாயம்
தனிமையில் வாழ சம்மதித்திருந்தால்
நானாக நீ.... வாழ்ந்திருப்பாய் என்னுள் "
என்று கூறி சட்டென விலகி சென்றாள்.

Wednesday, 17 December 2008

முயற்சி ...



வெற்றியின் தேடலில்

ஒவ்வொரு முறை

தோற்கும்போதும்

எங்காவது ஓடிச்சென்று

அழுது திர்த்துவிடுவதென்று

தனி இடம் அமர்கின்ற

மனது

அடுத்த தோல்விக்கு தயாராகிவிடுகிறது .





ஒவ்வொரு சந்திப்பின்
முடிவிலும்
சண்டையோடுதான் பிரிவேன்
நாளைய சந்திப்பை
உன் முத்தத்தோடு
தொடங்குவதற்காக ....

Saturday, 6 December 2008

ஒரு ஒற்றை புளியமரத்திற்கு அப்பால்
சூரியன் தன் இன்றைய மரணத்தை
நோக்கி பயணப்படிருந்த பொழுதில்
இரு அணில்கள் விளையாடிக்கொண்டே
மாநகரப்பேருந்து போல்
மரத்தின் கிளைகளுக்கும் தரைக்குமாய்
ஓடிக்கொண்டிருந்ததை ரசித்துகொண்டிருந்தேன்
என்னை சந்திக்க வந்த நீ
நம் பிரிதலுக்கான ஒப்பந்தத்தோடு
வந்திருக்கிறாய் என்றறியாமல்
பேச எத்தனித்த போது
சற்றும் சலனமின்றி நாம் பிரிந்து விடுவோம் என்றாய்
ஏதுமறியாது ஏனென்றேன்
ஆயிரமாயிரம் காரணங்கள் கூறினாய்
இரண்டு வருடங்களுக்கு முன்
என்னிடம் காதலை கூறும்போது
எவ்விதமான காரணங்களும் இல்லாமல்
வருவதுதான் காதல் என்றாயே
முறிந்தது காதலும் ரசனையும் .



Saturday, 29 November 2008

பேராசை

இது
கொஞ்சம் பேராசைதான்
என்றும் அவள் நினைவில்
நான்

மனிதம்

ஜாதி மதம்
மொழி இனம்
என நினைத்து நினைத்து
மனிதம் மறந்த
மானி(இ)டர்களை
என்ன செய்வது

தோல்விகள்

ஏமாற்றங்கள்
நிறைந்த வாழ்க்கையில்
தோல்விகள் கூட
சிம்மசொப்பனம்

சுமை

நான்
வெளியே செல்ல
என்னை என் தந்தையும்
எனது (மரக்)கால்களை
என் தாயும்
சுமக்கிறார்கள்