Sunday 7 March, 2010

தண்டனை




அவளை

மரணம் கூட

தழுவியிருக்கலாம்

என்னால்

மறக்கப்படுவதை விட


வரம்


கடந்து வந்த

காலங்களை

திரும்பிப் பார்க்கிறேன்

இழந்தவைகளை

எண்ணிப் பார்க்க

வயதை முந்திச்செல்கிறது

எண்ணிக்கை

சாதனை ஒன்றும்

இல்லை

சாதாரண மனிதனாக

வாழவும் இல்லை

இறைவா

இனி ஒருமுறை இந்த

மனிதப்பிறவி வேண்டா



குறிப்பு : இரண்டாவது கவிதை எனது நண்பர் பாலு எழுதியது