Monday 30 March, 2009

ஹிந்தி ......

பட்டாம் பூச்சி விருதை வேற கொடுத்துட்டாங்க இனிமே பதிவு போடாம இருந்தா அந்த விருதுக்கு மதிப்பே இல்லாம போயிடும் . (யாரோ சுரேஷ் கிட்ட
சொல்லி இருக்காங்க இப்படிஎல்லாம் உசுப்பேத்தினாதான் அடிக்கடி பதிவு போடுவாங்கன்னு.... இது சும்மா ) இப்ப பதிவுக்கு வருவோம் நான் ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி ரயில்வே டெஸ்ட் எழுத ( நாங்களும் எல்லாம் ட்ரை பண்ணிட்டுதான வந்துருக்கோம் ) செகந்தரபாத் போயிருந்தேன் அங்க ரயில விட்டு இறங்கினதும். ஒரு ஹோட்டல்ல ரூம் போடலாம்னு ஹோட்டல் தேடி போனேன் அங்க ரிசப்சன் பக்கத்துல போனேன் அவங்க எதோ ஹிந்தில கேட்டாங்க நமக்குத்தான் ஒண்ணுமே தெரியாதே ஒன் ரூம் ப்ளீஸ் சொன்னேன் அவங்களுக்கு புரியல போல ஒன்னு ஹிந்தில பேசறாங்க இல்லன்னா தெலுங்குல பேசறாங்க.இங்கிலிஷ்ல பேசினா எதோ பதில் சொல்லி இருக்கலாம் .(அதுக்காக இங்கிலீஷ் எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு யாரும் நினைக்க வேண்டாம் ).அங்க உள்ள மக்களும் ஒன்னு தெலுங்கு பேசறாங்க இல்லன்னா ஹிந்தி பேசறாங்க .
ஒருவழியா ரூம் கிடைச்சி டெஸ்ட் எழுதி முடிச்சாச்சி (எப்படி எழுதினேன்னு கேக்க கூ டாது ) திரும்பி ரயிலில் வந்து கொண்டிருந்தேன் அப்போ என்னோட கம்பாட் மேண்டுல முனு நாலுபேர் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர் அவங்க M C A , M Sc யோ படிச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டேன் . தற்செயலா அவங்க மார்க்சிட்ட பார்க்க நேர்ந்தது அதில் language ல பர்ஸ்ட் தெலுங்கு , செகண்ட் இங்கிலீஷ் , தேர்டு ஹிந்தி என்று இருந்தது . இப்ப என்ன மேட்டருன்னா இப்படி நமக்கும் இருந்திருந்தா நாமளும் படிச்சிருப்போம். ஆனால் அந்த வாய்ப்பு இருந்திருக்கும் ஏன்னா நான் படிச்ச பள்ளியில் ஹிந்தி வாத்தியார் என்று ஒருவர் இருந்தார். பள்ளியில் நான் சேர்ந்த பொது ஹிந்தி சார் ஹிந்தி சார்னு எல்லோரும் சொல்லுவாங்க ஆனா அவர் ஹிந்தி வகுப்பு எடுக்க வில்லை வரலாறும் இங்கிலீஷ் ம்ம் எடுத்தார் அப்புறம் ஏன் ஹிந்தி சார்னு சொல்லுறாங்கன்னு கேட்டேன் அதற்கு ஒருவர் சொன்ன பதில் .

எங்கள் பள்ளி ஒரு மேனஜ்மென்ட் பள்ளி எங்க அப்பா காலத்தில் இருந்து இருக்கிறது ஒரு நேரத்தில் ஹிந்தி கட்டாயப்பாடமாக கொண்டுவரப்பட்ட பொது அவர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் . சில நாளில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்துள்ளது . அதற்கு அப்புறம் ஹிந்தி கட்டாயப்பாடமாக இல்லை அதனால் வரலாறும் இங்கிலீஷ் ம்ம் எடுத்திருக்கிறார் .

இப்ப நான் சொல்ல வரது என்னன்னா நம்ம தமிழ் நாட்டை விட்டு வெளி மாநிலத்துக்கு போனா அந்த மாநிலத்தோட மொழி தெரிந்திருக்க வேண்டும் அல்லது நம் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்
இப்போது நான் இருக்கும் மலசியாவில் தமிழர்கள் ,சீனர்கள் .மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள் அவரவர்களுக்கு தாய் மொழி இருந்தாலும் மலாய் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் .
நம்ம நிலைமை மோசம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினவங்க பிள்ளைங்க எல்லாம் இப்ப ஹிந்தி எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு
எம் .பி ஆவும் மந்திரியாவும் இருக்காங்க ஆனா நாம ... ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் .........

Sunday 22 March, 2009

சினிமா சமுதாயத்திற்கு

என்ன செய்கிறது ?


இன்று மலேசிய தமிழ் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த விஷயம் மலேசியாவில் வழிப்பறி , கொலை, கொள்ளை எல்லாம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது
என்று பயத்தோடும் முக்கியமாக தமிழ் இளைஞர்கள் ஈடுபடுவதால் கவலையோடும் கூறிக்கொண்டு இருந்தார் . சினிமாவை பார்த்து கெட்டு போய்விட்டார்கள் என்றார் எண்பதுகளில் இந்தநிலைமை இல்லை என்றார்.
சினிமா ஒரு காரணமாக இருக்க முடியுமா?
சினிமாவில் என்ன நடக்கிறது ஹிரோ ரோல் பத்து பதினைந்து பேர அடிக்கிறதும் வில்லன்கிட்ட இருந்து ஹிரோயினையும் மக்களையும் காப்பாதுறதும் இது எல்லாம் நடைமுறையில் சாத்தியமா நிச்சயமாக இல்லை ஆனால் வில்லன் ரோல் பத்து பதினைந்து பேர கூடவச்சிக்கிட்டு
கொள்ளையடிக்கிறது ஒரு பெண்ணை கற்பழிக்கிறது இது எல்லாம் நடைமுறையில் சாத்திய மாகிறது வில்லன் ரோல் பார்த்து பார்த்து அந்த மாதிரி நாம ஏன் செய்யக்குடாது என்ற எண்ணம் வந்து விடுகிறது போல .
வில்லன் ரோல் மக்கள் முக்கியமாக இளைஞர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தி விடுகிறது . ஒரு சிலர் சினிமாவில் நல்ல விஷயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் கெட்ட விஷயத்தை விட்டுவிடவேண்டும் என்று சொல்லலாம் ஆனால் நுற்றுக்கு இருபது சதவிகிதம் பேர்தான் நல்ல விஷயத்தை எடுத்துக்குற பக்குவத்துல இருப்பாங்கன்னு நினைக்கிறேன்
அந்த என்பது சதவிகிதம் பேரோட நிலைமை என்ன ?

சில நாள்களுக்கு முன் கார்த்திகைபாண்டியன் அவர்கள் விளம்பரங்கள் சில மோசமாக இருக்கிறது என்று பதிவு போட்டிருந்தார் அதற்கு ஆதவா அவர்கள்
சில விளம்பரங்களில் தீம் நன்றாக இருக்கிறது என்று கருத்து சொல்லியிருந்தார் தீமை நானும் நீங்களும் ரசிப்போம் ஆனால் மக்கள் .

பி . கு : மன்னிக்க வேண்டும் ஆதவா சார் இந்த பதிவு போடும் பொது
அன்று படித்தது நினைவில் வந்தது நீங்கள் தவறாக என்ன வேண்டாம்
அப்புறம் நம்ம பதிவு எப்படி இருக்கிறது தவறு இருந்தால்
சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன் .

Saturday 7 March, 2009

கனவு
இது இல்லையென்றால்
மனிதனின்
வாழ்க்கையில் முழுமையும்
இல்லை
-----------------------------------------------------------------
வன்முறை
கல்லறை ஆகும் வரை
தேசத்தில்
அமைதியின் கருவரை
உருவாவதில்லை
-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது

உயிர் போகிற வலியை விடக்கொடுமையானது
மனசுக்குப் பிடித்தவர்களின் கண்ணிர்த்துளிகள்
அதைவிடக் கொடுமையானது அதற்கு காரணம்
நாமாக இருப்பது