Monday 13 July, 2009

பதிவுலக நண்பர்களுக்கு

அன்பான பதிவுலக நண்பர்களுக்கு மூன்று வார விடுப்பில் நான் இந்தியா வந்துருக்கிறேன் அதனால் உங்களது பதிவுகளை படிக்கவும் பின்னுட்டம் இடவும் வாய்ப்புகள் குறைவு . எங்களது ஊரில் திருவிழா பதினான்காம் தேதி முதல் பதினேழாம் தேதி வரை நடைபெற உள்ளது நண்பர்கள் அனைவரும் வந்து அரியநாச்சியம்மன் அருளை பெற்றுச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்

Saturday 4 July, 2009

அகோர உருவம்



நிசப்த இரவொன்றில்
அனுமதியுடனே மின்சாரம்
விடை பெற்றுக்கொண்டதில்
மெழுகுவர்த்தியின் சுடரையே
சுற்றியது பெயர் தெரியாத
பூச்சியொன்று
நீண்ட இரு கைகளில்
ஒன்று இறகு பற்றி
ஒவ்வொரு பாகமாக சுடரின்
தீயில் வாட்டிய பின்
அறை அதிரும் வண்ணம்
சிரித்து விட்டு அடங்கியது
அந்த உருவம் என்னுள்