Monday 8 June, 2009

நானே கவிதைன்னு சொல்லிக்கிறது - 2


என் காதல்



ஏழாவது படிக்கும்போது

இடைவிடாது பேசிய உன்னை

பார்த்த நான் பைத்தியம் என்றேன்

இன்று

உன்மீதான என் காதலை

என் மௌனங்களால் சிதைத்துக்கொண்டிருக்கிறேன்


ஒவ்வொரு கோடை விடுமுறையிலும்

நீ வரும்போது

வைரமுத்து கவிதை வரிகள் போல்

என் பிம்பம் விழுந்து கண்ணாடி

உடைந்ததோ இல்லையோ

உன் பிம்பம் விழுந்து

என் இதயம் உடைந்தது


எனக்காக நான் வாங்கிய

எந்தப் பொருளும்

என்னிடம் அதிக நாள் இருந்ததில்லை

தானமாக கொடுத்துவிடுவது

பிறர் தனதாக்கிகொள்வது

உனக்காக நான் வாங்கிய

ஒரு பொருள்

ஆறு வருடங்களாக என்னிடமே....


11 comments:

தேவன் மாயம் said...

என் பிம்பம் விழுந்து கண்ணாடி

உடைந்ததோ இல்லையோ

உன் பிம்பம் விழுந்து

என் இதயம் உடைந்தது
///
நல்லா வந்திருக்கு நண்பரே!!

தேவன் மாயம் said...

ஏழாவது படிக்கும்போது காதல் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் .ஆனால் அது உண்மை!!

கார்த்திகைப் பாண்டியன் said...

காதல் கவிதை கலக்கல் நண்பா.. மனசையும் பரிசையும் ஒண்ணாக் கொடுத்து அசத்துங்க

gayathri said...

உன் பிம்பம் விழுந்து

என் இதயம் உடைந்தது


ada athu than pa kathal

ச. ராமானுசம் said...

Touching lines & beautiful words.

"உன்மீதான என் காதலை

என் மௌனங்களால் சிதைத்துக்கொண்டிருக்கிறேன்"

What is the meaning of this? Pls educate me.

குமரை நிலாவன் said...

// thevanmayam said...
என் பிம்பம் விழுந்து கண்ணாடி

உடைந்ததோ இல்லையோ

உன் பிம்பம் விழுந்து

என் இதயம் உடைந்தது
///
நல்லா வந்திருக்கு நண்பரே!! //

வருகைக்கு நன்றி தேவா சார்

ஏழாவது படிக்கும்போது காதல் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் .ஆனால் அது உண்மை!!

உண்மைதான் தேவா சார்

குமரை நிலாவன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
காதல் கவிதை கலக்கல் நண்பா.. மனசையும் பரிசையும் ஒண்ணாக் கொடுத்து அசத்துங்க//

வருகைக்கு நன்றி நண்பா

இப்ப முடியாது நண்பா

குமரை நிலாவன் said...

// gayathri said...
உன் பிம்பம் விழுந்து

என் இதயம் உடைந்தது


ada athu than pa kathal//

நன்றி காயத்ரி

குமரை நிலாவன் said...

// ச. ராமானுசம் said...
Touching lines & beautiful words.

"உன்மீதான என் காதலை

என் மௌனங்களால் சிதைத்துக்கொண்டிருக்கிறேன்"

What is the meaning of this? Pls educate me.//

சொல்ல முடியாத நிலை என்று வைத்துக் கொள்ளுங்கள்

sakthi said...

என் பிம்பம் விழுந்து கண்ணாடி

உடைந்ததோ இல்லையோ

உன் பிம்பம் விழுந்து

என் இதயம் உடைந்தது

அருமை மிக மிக அருமை

Sinthu said...

"உனக்காக நான் வாங்கிய ஒரு பொருள்ஆறு வருடங்களாக என்னிடமே....அது என்ன பொருள்............?"
கவிதை நன்றாக உள்ளதே, அனுபவமா?