Sunday 22 March, 2009

சினிமா சமுதாயத்திற்கு

என்ன செய்கிறது ?


இன்று மலேசிய தமிழ் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த விஷயம் மலேசியாவில் வழிப்பறி , கொலை, கொள்ளை எல்லாம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது
என்று பயத்தோடும் முக்கியமாக தமிழ் இளைஞர்கள் ஈடுபடுவதால் கவலையோடும் கூறிக்கொண்டு இருந்தார் . சினிமாவை பார்த்து கெட்டு போய்விட்டார்கள் என்றார் எண்பதுகளில் இந்தநிலைமை இல்லை என்றார்.
சினிமா ஒரு காரணமாக இருக்க முடியுமா?
சினிமாவில் என்ன நடக்கிறது ஹிரோ ரோல் பத்து பதினைந்து பேர அடிக்கிறதும் வில்லன்கிட்ட இருந்து ஹிரோயினையும் மக்களையும் காப்பாதுறதும் இது எல்லாம் நடைமுறையில் சாத்தியமா நிச்சயமாக இல்லை ஆனால் வில்லன் ரோல் பத்து பதினைந்து பேர கூடவச்சிக்கிட்டு
கொள்ளையடிக்கிறது ஒரு பெண்ணை கற்பழிக்கிறது இது எல்லாம் நடைமுறையில் சாத்திய மாகிறது வில்லன் ரோல் பார்த்து பார்த்து அந்த மாதிரி நாம ஏன் செய்யக்குடாது என்ற எண்ணம் வந்து விடுகிறது போல .
வில்லன் ரோல் மக்கள் முக்கியமாக இளைஞர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தி விடுகிறது . ஒரு சிலர் சினிமாவில் நல்ல விஷயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் கெட்ட விஷயத்தை விட்டுவிடவேண்டும் என்று சொல்லலாம் ஆனால் நுற்றுக்கு இருபது சதவிகிதம் பேர்தான் நல்ல விஷயத்தை எடுத்துக்குற பக்குவத்துல இருப்பாங்கன்னு நினைக்கிறேன்
அந்த என்பது சதவிகிதம் பேரோட நிலைமை என்ன ?

சில நாள்களுக்கு முன் கார்த்திகைபாண்டியன் அவர்கள் விளம்பரங்கள் சில மோசமாக இருக்கிறது என்று பதிவு போட்டிருந்தார் அதற்கு ஆதவா அவர்கள்
சில விளம்பரங்களில் தீம் நன்றாக இருக்கிறது என்று கருத்து சொல்லியிருந்தார் தீமை நானும் நீங்களும் ரசிப்போம் ஆனால் மக்கள் .

பி . கு : மன்னிக்க வேண்டும் ஆதவா சார் இந்த பதிவு போடும் பொது
அன்று படித்தது நினைவில் வந்தது நீங்கள் தவறாக என்ன வேண்டாம்
அப்புறம் நம்ம பதிவு எப்படி இருக்கிறது தவறு இருந்தால்
சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன் .

20 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

சமுதாய சிந்தனை கொண்ட நல்ல பதிவு நண்பா.. ஆனால் இன்னும் நெறைய எழுதி இருக்கலாம்.. பிரச்சினை என்ன என்பதை மட்டும்தான் சொல்லி உள்ளீர்கள்.. அப்புறம்.. உங்களுடைய பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்கலாமே..

குமரை நிலாவன் said...

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி நண்பா

இப்போதான நண்பா எழுத ஆரம்பித்து இருக்கிறேன் இனி வரும் பதிவுகளில் நிறைய எழுதுகிறேன் .
ஆனால் நேரம் தான் கிடைக்குமா என்று தெரியவில்லை
தமிழ் மணத்தில் இணைக்கலாம். ஆனால் நிறைய பதிவுகள் போடவேண்டும் அதற்கு நேரம் கிடைப்பதில்லை நண்பா .

Suresh said...

sathiaymana unmai we are working for astro malaysia project

i went for onsite,my friends are going every month .. for more than five times.. but i heard from malaysian tamilians when i told a stall keeper that i am going to go a cinema in midnight 12 appo sonnaru parunga

//மலேசியாவில் வழிப்பறி , கொலை, கொள்ளை எல்லாம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது
என்று பயத்தோடும் முக்கியமாக தமிழ் இளைஞர்கள் ஈடுபடுவதால் கவலையோடும் கூறிக்கொண்டு இருந்தார் .//

ithu unmai .. vanga palana cd kidaikkum kuttitu poti adipini .. anupuranga .. kelvi pattan .. parthu jagirathya than irukanum

Suresh said...

//ஆனால் நேரம் தான் கிடைக்குமா என்று தெரியவில்லை //

evanukku neram irukku enna seiya enakku athae perchanai than night oru maniyanalum vanthu oru pathiva pottutu than thunga poraen

puli vala pudicha kathaiya

namma kadaikku vara makkala santhosa paduthanumla

neengalum muyarchi panunga apprum palagidum

Suresh said...

nanba nalla irukku athilum neenga solla vanthu soli irukinga.. ana karthiagai sonna mathiri chinna tha mudichitinga.. vitu oru kili kili chi iruntha romba nalla irunthu irukkum

eppo kuda kettu pogala unga pathiva part 2 pottalum seri illai na innum serthalum seri

Suresh said...

//ஆனால் வில்லன் ரோல் பத்து பதினைந்து பேர கூடவச்சிக்கிட்டு
கொள்ளையடிக்கிறது ஒரு பெண்ணை கற்பழிக்கிறது இது எல்லாம் நடைமுறையில் சாத்திய மாகிறது வில்லன் ரோல் பார்த்து பார்த்து அந்த மாதிரி நாம ஏன் செய்யக்குடாது என்ற எண்ணம் வந்து விடுகிறது போல .//

correct than ...

Suresh said...

//வில்லன் ரோல் மக்கள் முக்கியமாக இளைஞர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தி விடுகிறது .//

kaka ka villan a parthu visil adichom... kallurila rowdisam panum
chandra mugila vettayana like pannom

karanam namma manasu kulla irukira vaikkiram .. eppadi nammala mudiayatha evanachum sencha visil adichu super solran.. esp athula oru attraction iruku nanba

ella super arumaiya eltuhuringa kandipa perusa eluthunga.. nalla padichitu varum pothu takkunu mundicha mathiri ellai mudichita mathiri iruku :-) all the best

தேவன் மாயம் said...

கொள்ளையடிக்கிறது ஒரு பெண்ணை கற்பழிக்கிறது இது எல்லாம் நடைமுறையில் சாத்திய மாகிறது வில்லன் ரோல் பார்த்து பார்த்து அந்த மாதிரி நாம ஏன் செய்யக்குடாது என்ற எண்ணம் வந்து விடுகிறது போல .
வில்லன் ரோல் மக்கள் முக்கியமாக இளைஞர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தி விடுகிறது ///

உண்மைதான் நிலாவன்!!

தேவன் மாயம் said...

ஆனால் நுற்றுக்கு இருபது சதவிகிதம் பேர்தான் நல்ல விஷயத்தை எடுத்துக்குற பக்குவத்துல இருப்பாங்கன்னு நினைக்கிறேன்
அந்த என்பது சதவிகிதம் பேரோட நிலைமை என்ன ?////

யார் அவர்களை நெறிப்படுத்துவது?

குமரை நிலாவன் said...

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி தேவா சார்

குமரை நிலாவன் said...

sathiaymana unmai we are working for astro malaysia project

i went for onsite,my friends are going every month .. for more than five times.. but i heard from malaysian tamilians when i told a stall keeper that i am going to go a cinema in midnight 12 appo sonnaru parunga

ithu unmai .. vanga palana cd kidaikkum kuttitu poti adipini .. anupuranga .. kelvi pattan .. parthu jagirathya than irukanum

உண்மை நண்பா கோலாலம்பூர் மாதிரி
பெரிய இடங்களில் இன்னும் அதிகமாக
நடக்கிறது

குமரை நிலாவன் said...

இரவு பதில் தருகிறேன்

SASee said...

//தமிழ் இளைஞர்கள் ஈடுபடுவதால் கவலையோடும் கூறிக்கொண்டு இருந்தார் . சினிமாவை பார்த்து கெட்டு போய்விட்டார்கள் என்றார் எண்பதுகளில் இந்தநிலைமை இல்லை என்றார்.
சினிமா ஒரு காரணமாக இருக்க முடியுமா? //

கவலைக்குறிய விடயம் இப்படிப்பட்ட வழிப்பறி , கொலை, கொள்ளை என்பவற்றில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர் என்றால், அதிலும் தமிழ் இளைஞர்கள் என்றால். இதற்கு சினமா ஒரு காரணம் ஆகலாம். ஆனால் சினிமா மட்டுமே காரணமாகிவிட முடியாது.
அதாவது எண்பதுகளிலும் இன்றைய கால சினிமாவை விட கொடுமையான விடயங்களை சித்தரித்திருந்தது சில தமிழ் படங்கள்.
அப்படியானால் அன்றைய கால இளைஞர்கள்......???


இப்படியொன்றை கூறலாம் என நினைக்கிறேன்
தமிழ் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர் என்றால், நான் நினைக்கிறேன் தமிழ் இளைஞர்களுக்கு என்ன நடக்கின்றது என்று சரியாக புரிந்து கொள்ள வில்லை போலும் எம் இளைஞர்கள்.
எதிர் காலத்தில் அவர்கள் உலகலாவிய ரீதியில் என்ன நிலைக்கு உட்பட போகின்றார்கள் என நினைத்தால் பயமாக இருக்கின்றது!

நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள வில்லை!
ஒரு இளைஞனது வாழ்க்கையை வழி மாற்றும் சூத்திரதாரிகளை சரியாக அடையாளம் காண!

குமரை நிலாவன் said...

//சுரேஷ் //
நிறைய எழுத முயற்சி செய்கிறேன்
நண்பா

குமரை நிலாவன் said...

சசி said

//தமிழ் இளைஞர்கள் ஈடுபடுவதால் கவலையோடும் கூறிக்கொண்டு இருந்தார் . சினிமாவை பார்த்து கெட்டு போய்விட்டார்கள் என்றார் எண்பதுகளில் இந்தநிலைமை இல்லை என்றார்.
சினிமா ஒரு காரணமாக இருக்க முடியுமா? //

அன்றைய இளைஞர்கள் கெடாமல் இருந்ததற்கு
எண்பதுகளில் குடும்பப் பிணைப்பு
அதிகமாக இருந்தது ஒரு காரணமாக
இருந்ததிருக்கலாம்

இப்போது குடும்ப பிணைப்பு குறைந்து
விட்டதும் ஒரு காரணமாகலாம் .

Shobana said...

இந்த பதிவு பதித்தவுடன் எனக்குத் தெரிவித்து இருக்கலாமே நிலாவன்...

எனக்கு எந்த எண்ணமும் இல்லை.. உங்கள் கருத்து நீங்கள் சொன்னீர்கள் அவ்வளவே!

நான் ஃபாஷன் உலகம் நிறைந்த நகருக்குள் வாழ்கிறேன். எனக்குக் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அழகுதான்.. ஒரு நிர்வாண ஓவியத்தை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்களோ தெரியாது, என் கண்ணுக்குத் தெரிவது அதன் அழகு... நுட்பம்... அவ்வளவே//

விளம்பரங்களில் தீயதும் உண்டு!! நன்மையும் உண்டு!! ஏன், இணையத்திலேயே கூட உண்டு!! அதற்காக இணையமே தவறு என்று சொல்ல முடியுமா... முடியாதுதானே..
விளம்பரங்களில் வரும் theme களை நேசியுங்கள். அதன் தொழில்நுட்பம், ஆக்கம் போன்றவற்றை ஆராயுங்கள்...

லைக் தட்.... அவ்வளவு தான்....

---------

நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள். நேரம் கிடைக்கும் பொழுது விமர்சியுங்கள்.. ஏனெனில் நம் வாழ்க்கைக்குப் பிறகுதான் வலையுலகம் எல்லாமே!!!

குமரை நிலாவன் said...

shobana
புதிதாக வந்திருக்கிங்க
வந்ததுக்கு மிக்க நன்றி

//விளம்பரங்களில் தீயதும் உண்டு!! நன்மையும் உண்டு!! ஏன், இணையத்திலேயே கூட உண்டு!! அதற்காக இணையமே தவறு என்று சொல்ல முடியுமா... முடியாதுதானே..
விளம்பரங்களில் வரும் theme களை நேசியுங்கள். அதன் தொழில்நுட்பம், ஆக்கம் போன்றவற்றை ஆராயுங்கள்... //

நீங்கள் சொல்வது போல் theme ,தொழில் நுட்பம்
ஆகிய வற்றை ரசிப்பேன்.
நான் சொல்லவந்தது
நல்லதை எடுத்துக்கொள்ளும் மனம் மக்களில் எத்தனை பேருக்கு இருக்கும் .

குமரை நிலாவன் said...

//நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள். நேரம் கிடைக்கும் பொழுது விமர்சியுங்கள்.. ஏனெனில் நம் வாழ்க்கைக்குப் பிறகுதான் வலையுலகம் எல்லாமே!!!//

கண்டிப்பாக நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் .
நம் வாழ்க்கைக்கு பிறகுதான் வலையுலகம்
என்று நீங்கள் சொல்வது சரிதான்
ஆனால் நான் இப்போது இருக்கும் சுழ்நிலையில்
எனக்கு ஒரு சந்தோசத்தை கொடுப்பது வலைவுலகம்
மட்டுமே .வலைவுலகம் எனக்கு நல்ல நண்பர்களை
கொடுத்துள்ளது .

Suresh said...

ungalukku pattam puchi award koduthu irukkaen parunga.. keep posting
http://sureshstories.blogspot.com/

Suresh said...

Hi

I have given u pattam puchi award after seeing ur posts, i liked it also i have mentioned why this has been given to u

see http://sureshstories.blogspot.com/

Keep posting