Sunday, 17 May 2009

நானே கவிதைன்னு சொல்லிக்கிறது 1

தொலைந்த ஒன்றை
தேடும் முயற்சியில் நான்
அம்மாவின் அன்பில்
அப்பாவின் அறிவுரையில்
பக்கத்து வீட்டு மழலை மொழியில்
நிலைக்கண்ணாடியில்
கணினியில்
புத்தகங்களில்
கவிதையில் தொலைதலும் பின்
மீட்தலும் நித்தம் நிகழும் நிகழ்வு .
பின் எங்கு தேடியும் கிடைக்க வில்லை
காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....