Friday, 13 February 2009

நானாக நீ....


ஒரு
தொலைதூர பயணத்திற்காக ரயில்
நிலையத்தில் காத்திருந்த தருணத்தில்
என்னை நோக்கி குழந்தையுடன் வந்த அவள் ...
நான்கு வருடங்களுக்கு முன்
என்னுள் பலமுறை தன் உதடு பதித்தவள்
ஏமாற்றங்களையே அதிகமாக சந்தித்த இதயம்
என்று தெரிந்ததாலோ என்னவோ
என் காதலை சொன்னவுடன் ஏற்றுக்கொண்டவள்
அன்றும் சரி இன்றும் சரி
என் தனிமை இரவுகளின் அமைதியில்
அருகில் இருப்பதும் அவள் நினைவுகள் மட்டுமே
ஆம் அவள் என் அவளே தான் ...
அருகில் வந்த அவள் வழக்கமான
நலம் விசாரிப்புகளுக்குப் பின்
" நான்
இன்றும் உன்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்ற நம்பிக்கையில் தான்
அவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்னையும் உன்னைப்போல் இந்த சமுதாயம்
தனிமையில் வாழ சம்மதித்திருந்தால்
நானாக நீ.... வாழ்ந்திருப்பாய் என்னுள் "
என்று கூறி சட்டென விலகி சென்றாள்.